Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை சின்னத்திற்கு வாக்கு.. பிரதமர் மோடிக்கு வேட்டு.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

Mahendran
வெள்ளி, 29 மார்ச் 2024 (15:33 IST)
கை சின்னத்திற்கு வாக்கு போட்டால் பிரதமர் மோடியின் தலைக்கு வேட்டு வைக்கலாம் என திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் முடிவடைந்து தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பூத்திற்கு நீங்கள் சென்றவுடன் உங்களுக்கு தெரிய வேண்டிய ஒரே சின்னம் கை சின்னம் தான் என்றும் அந்த சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடியின் தலைக்கு வேட்டு வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், பாஜக சார்பில் பாலகணபதி, தேமுதிக சார்பில்  நல்ல தம்பி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீஷ் சுந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருவள்ளூர் தொகுதியை பொருத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலுவாக இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments