Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி டீ-சர்ட் போடக்கூடாது! மீறினால் நாங்கள் வழக்கு போடுவோம்! - ஜெயக்குமார் எச்சரிக்கை!

Prasanth Karthick
திங்கள், 7 அக்டோபர் 2024 (14:56 IST)

அரசு விழாக்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டீ-சர்ட் அணிந்து செல்வது மரபுக்கு எதிரானது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 

 

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு விழாக்களுக்கு சட்டை அணியாமல் டி-சர்ட் அணிந்து அதில் கட்சி சின்னத்தை பதிவு செய்து வருகிறார். அவரிடம் சட்டை இல்லையா? இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம்.

 

டி-சர்ட்டில் கட்சி சின்னத்தை பொறித்துக் கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது ஏற்புடையது அல்ல. உங்கள் கட்சி நிகழ்ச்சிக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 

ALSO READ: மக்கள் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் கவனம் செலுத்துங்கள்! - நடிகர் விஜய் கோரிக்கை!
 

அரசு ஊழியர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் என 2019ல் அரசு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் சட்டை, ஃபார்மல் பேண்ட் அல்லது வேட்டி என தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

வீட்டில் நடைப்பயிற்சி செல்லும்போது அணிவதுதான் டி-சர்ட். அதை அரசு நிகழ்ச்சிக்கு போட்டு செல்வது உதயநிதி மட்டும்தான். கண்ணியம் என்ற ஒன்று இருக்கிறது. தொடர்ந்து உதயநிதி அரசு விழாக்களுக்கு டி-சர்ட் அணிந்து சென்றால் அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிவு..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு.. முழு விவரங்கள்..!

நாடு சுதந்திரம் ஆன பின்னர் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்.. உபி கிராமத்தில் அதிசயம்..!

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

அடுத்த கட்டுரையில்
Show comments