Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பதில்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:02 IST)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன் என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. கூட்டணி முடிவுகளுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் பிஸியாகிவிட்ட திமுக தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. 
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் – திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். திமுகவுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படுகிறது இந்த தொகுதிகள். இந்த இரு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தது ஏன் என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார். 
 
அதில் அவர் கூறியதாவது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி செயளாலர்கள், மாவட்ட செயலாளர் இந்த தொகுதியில் நான் போட்டியிட விருப்பத்தை தெரிவித்தனர். எளிதில் நிச்சியமாக வெற்றி பெறலாம் என தெரிவித்தனர். அதனால்தான், இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். இந்தத் தொகுதியில் என்னுடைய பிரசாரத்தைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு உள்ளது. என்னுடைய வெற்றியை மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments