Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு!

Vellore
Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (14:09 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியில் வசித்து வந்த சரத்குமார் என்ற இளைஞர்  தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா- அமிர்தா தம்பதியரின் இரண்டாவது மகன் சரத்குமார்(26).

இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில்  தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரை கூறிவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன் பைக்கில் வீட்டில் இருந்து சென்ற சரத்குமார் நேற்று வீட்டிற்குத் திரும்பவில்லை. இதையடுத்து தன் தங்கைக்கு போன் செய்து, தான் இறக்கப்போவதாகக் கூறியதுடன், தன் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறக்கப்போவதாக பதிவிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜாப்ராபேட்டை பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் அவரது பைக் கண்டெடுக்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினரின் உதவியுடன்  கிணற்றில் சரத்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

லிஃப்ட் தருவதாக சொல்லி இளம்பெண் இருமுறை பலாத்காரம்! - கோவில் பூசாரி கைது!

காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த ஈபிஎஸ்! முதல்வர் முக ஸ்டாலின்

இடியை கண்டாலும் பயம் இல்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச்சென்றது ஏன்? ஈபிஎஸ் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments