Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக எல்லைக்குள் புகுந்து ரெளடித்தனம்: வாட்டாள் நாகராஜூக்கு கண்டனம்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (12:25 IST)
தமிழக எல்லைக்குள் புகுந்து ரெளடித்தனம்
தமிழக-கர்நாடக எல்லையில் கன்னடச் சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழில் உள்ள பெயர் பலகைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மலைப்பகுதி கிராமம் ராமபுரம் என்ற இடத்தில் உள்ள தமிழக பகுதியில் தமிழக அரசின் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட்டுள்ளது 
 
இதில் தமிழ்நாடு மாநில எல்லை என்று எழுதப்பட்டுள்ள இந்த பெயர் பலகையை கன்னட சலுவளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று மாலை திடீரென புகுந்து கன்னட மொழியில் ஏன் எழுதவில்லை என அந்தப் பெயர் பலகையை அடித்து உடைத்து ரவுடித்தனம் செய்து உள்ளனர்
 
தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழக அரசுக்கு சொந்தமான பெயர் பலகையை வாட்டாள் நாகராஜ் குழுவினர் சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜன் இந்த செயலுக்கு தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக எல்லைக்கு நுழைந்து தமிழ் பதாகைகளை அழிப்பதா? வாட்டாள் நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments