Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப் பழக்கங்களைத் தடை செய்து சட்டம் இயற்றுக! முதல்வருக்கு விசிக எம்பி கோரிக்கை..!

ravikumar
Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:19 IST)
மூடப் பழக்கங்களை தடை செய்து சட்டம் இயற்றுக என முதல்வர் முக ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிகுமார்  கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மூடப் பழக்கங்களை தடை செய்து பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அஸ்ஸாம், ராஜஸ்தான், கர்னாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் அதைப்போல சட்டம் இயற்ற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர்
ஸ்டாலின்  அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இதை வழி மொழிகிறவர்கள் ரிட்வீட் செய்யுங்கள்

முன்னதாக அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது மூடப்பழக்கங்களை மாணவ மாணவிகள் மத்தியில் திணிப்பது போல் உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவம் காரணமாகத்தான் இந்த பிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என்று அவர் கூறியது சர்ச்சைக்கு உள்ளானது.

இது போன்ற மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மனதில் விதைப்பது குற்றம் என்று திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இது குறித்து கருத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments