Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்.. விசிக எம்பியின் எக்ஸ் பதிவு..!

Siva
திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:34 IST)
பழனியில் முருகன் மாநாடு சிறப்பாக நடைபெற்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுப்படுத்தும்

முத்தமிழ் முருகன் மாநாடு சமயச் சார்பற்ற தமிழ் அடையாளத்தைப் புகுத்தும் நல்ல நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டிருந்தாலும் அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும்.

ஏனென்றால் தமிழ்க் கடவுள் எனப்படும் முருகன் இந்து அடையாளத்துக்குள் நீண்ட காலத்திற்கு முன்பே உள்வாங்கப்பட்டுவிட்டார். முருகக் கடவுளுக்கு ஆடு அறுத்து படையிலிடப்பட்டது என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

அப்படி பக்தர்கள் இப்போது படையிலிட முடியாது. முருகனும் மற்ற தமிழ்க் கடவுள்களும் இந்து அடையாளத்துக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments