Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய அளவில் மதுவிலக்கு.. முதல்வரை சந்திக்கும் முன் திருமாவளவன் பேட்டி..!

Mahendran
திங்கள், 16 செப்டம்பர் 2024 (11:45 IST)
தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்திக்க உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 
தேசிய மதுவிலக்கு கொள்கையை  மத்திய அரசிடம் திமுகவும் வலியுறுத்த வேண்டும் என்பதால் முதல்வரை சந்திக்க இருக்கிறேன் என கூறிய திருமாவளவன், அரசியலுக்காக மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தவில்லை என்று கூறினார். 
 
மேலும் முதல்வரின் சந்திப்பின் போது, மதுவிலக்கு மாநாடு குறித்து ஆலோசிப்போம், மாநாட்டிற்கு அழைப்பும் விடுப்போம் என்றும், அதிமுக போன்ற கட்சிகளுக்கு நேரில் அழைப்பு விடுப்பது குறித்து இரண்டு ஒரு நாட்களில் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் மதுவிலக்கு மாநாட்டை விசிக கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

வனக் கல்லூரியில் 27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டியை - வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments