Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடும் என சீமானுக்கு அச்சம்: – எம்பி மாணிக்கம் தாகூர்!

Mahendran
செவ்வாய், 5 நவம்பர் 2024 (15:57 IST)
விஜய்யின் வருகை நாம் தமிழர் கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடும் என்று சீமானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விஜய்யின் அரசியல் வருகையால் சீமானுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

விஜய்யின் வருகை தனது கட்சி கூடாரத்தை காலி செய்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை மட்டும் வாக்களித்துவிட்டு மறுமுறை வேறு அரசியல் கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக தான் சீமான் திகழ்கிறார்.

எப்போதுமே புதிய கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுங்கட்சி விமர்சனம் செய்து பழக்கம். அந்த வகையில் தான் விஜய் தற்போது ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். அவரது விமர்சனத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லையா என்பதை இனிமேல் தான் முடிவு செய்ய முடியும்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ள நிலையில், இதற்கு சீமான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments