Publish Date: Fri, 09 Oct 2020 (14:11 IST)
Updated Date: Fri, 09 Oct 2020 (14:13 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே.
ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு அடைந்ததை அடுத்து அவர் மீண்டும் அதே மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த நிலையில் தற்போது அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது: அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விஜயகாந்த் அவர்கள் மருத்துவ குழுவினர் கண்காணிப்பின் மூலம் அனைத்து கதிரியக்க பரிசோதனைகளிலும் அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததை அடுத்து இன்று அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்