Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் தேதி: பிரேமலதா அறிவிப்பு

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (21:39 IST)
அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளை பெற்ற தேமுதிக, வரும் தேர்தலில் அந்த நான்கிலும் வெற்றி பெற கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும், விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகனும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
உடல்நிலை காரணமாக விஜயகாந்த் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் தேதியை பிரேமலதா அறிவித்துள்ளார்.
 
கூட்டணி கட்சி தலைவர்களை ஆதரித்து ஏப்ரல் 15-ம் தேதி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரசாரம் செய்யவிருப்பதாக இன்று  சாத்தூர் பிரச்சார கூட்டம் ஒன்றில் பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 16ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் கிட்டத்தட்ட கடைசி நேரத்தில் விஜயகாந்த் பிரச்சார களத்தில் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் அவர் எந்தெந்த தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறித்த தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments