Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் இல்லை: நீதிமன்றம் அதிரடி

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (14:52 IST)
கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
 
பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய ஐந்து பேரின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளதால் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது என்று கூறிய தள்ளுபடி செய்தார்
 
சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த தகவல் அறிக்கையை தாக்கல் செய்த பள்ளி நிர்வாகிகளின் வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். மேலும் இந்த வழக்கு வரும் 1ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments