Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசு கொடுத்தால் பெட்ரோல் குண்டு வீசும் வினோத்! – போலீஸார் தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:24 IST)
சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் காசுக்கு வேலை செய்பவர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை தி நகரில் கமலாலயம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு நேரத்தில் 3 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி மர்ம நபர் கமலாலயம் மீது வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வினோத் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வினோத் காசு வாங்கி கொண்டு பெட்ரோல் வீசும் நபர் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டில் டாஸ்மாக் மீதும், 2017ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்குகளில் வினோத் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாஜக அலுவலகம் மீது குண்டு வீச யாரேனும் சொன்னார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னையை விட கூடுதல் லாபம் தரும் ஜாதிக்காய்!

தென்னைக்கு இடையே அவகோடா - லாபத்தை அள்ளித்தரும் அதிசயம்!

சென்னை வீராணம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் செல்வதில் சிக்கல்...

காவல் துறையினரிடம் குறைகளை கேட்டறிந்த டி.ஜிபி.சங்கர் ஜிவால்!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments