Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (07:30 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தன்னுடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
கொரோனா முதல் அலையின் போதும் இரண்டாவது அலையின்போதும் கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது தெரிந்ததே. தற்போது அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments