Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளே என் நாட்டை காப்பாற்று - விஷால் கதறல்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (11:55 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


 
விஷாலின் வேட்புமனு நேற்று முன்தினம் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியால் நிராகரிக்கப்பட்டது. விஷாலை முன்மொழிந்த இருவரது கையெழுத்து போலி என்ற குற்றச்சாட்டு காரணமாக அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 
 
இதற்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது டிவிட்டர் பக்கம் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபாதி அலுவலகத்திற்கும் அவர் புகார் அனுப்பினார். மேலும், நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யும் கோரிக்கை மனுவை கொடுத்தார். ஆனால், விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது சரிதான் என அவரும் கை விரித்து விட்டார்.
 
இந்நிலையில் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் “ ஜனநாயகம் மீண்டும் தலைதூக்கும் என நம்புகிறேன். கடவுளே! என் இந்த ஆராஜகங்களிலிருந்து என் நாட்டைக் காப்பாற்று” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments