Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி.. வீடு வீடாக சென்று இன்று முதல் தொடக்கம்..

Siva
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று முதல் நடைபெறுவதாகவும் வீடு வீடாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் சென்று இந்த பணியை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கும் நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி வரை இந்த பணி நடைபெறும் என்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்கு சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை முரண்பாடுகள் குறித்து அறிதல், வாக்காளர் பட்டியலில் தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இணைக்க வரும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments