Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவு தொடங்கியது: விறுவிறுப்பான வாக்குப்பதிவு என தகவல்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (07:33 IST)
தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுவையில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கு மேற்கண்ட மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது
 
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
 
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் இரு தொகுதியிலும் காமராஜ் நகர் தொகுதியிலும் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி இருப்பதால் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாமல் உள்ளது
 
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் இரு தொகுதி முடிவுகளால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இரு கட்சிகளின் தலைமையின் நம்பகத்தன்மை இந்த தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments