Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

Mahendran
செவ்வாய், 6 மே 2025 (11:59 IST)
நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் எங்கே போர் ஒத்திகை நடைபெற உள்ளது என்பது குறித்து ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
 
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
 
இதனை அடுத்து, தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை, மணலி பெட்ரோலிய தொழிற்சாலை ஆகிய இடங்களில் போர் ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
போர் பாதுகாப்பு ஒத்திகைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன?

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டிப்பு.. பட்டுக்கோட்டை அருகே பயங்கர சம்பவம்..!

ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

டான்ஸ் ஆடிய மணப்பெண் மயங்கி விழுந்து பலி! - துக்க வீடான திருமண வீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments