Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

Siva
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (07:44 IST)
கொடைக்கானலுக்கு ஐந்து லிட்டருக்கு குறைவான தண்ணீர் அதிகமாக கொண்டு சென்றால் பசுமை வரியாக 20 ரூபாய் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொடைக்கானல் பகுதியில் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து பிளாஸ்டிக் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு, குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் வைத்திருந்தால், ஒவ்வொரு பாட்டிலுக்கும் 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஐந்து லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை கொடைக்கானலுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வைத்திருந்தால், பசுமை வரியாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் 20 ரூபாய் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கொடைக்கானல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments