Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆனாலும் திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது: கனிமொழி

Webdunia
திங்கள், 15 ஜனவரி 2018 (23:00 IST)
திமுகவின் நாத்திக பேச்சால் தான் அக்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து கொண்டே போகிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. தமிழகத்தில் 95% ஆத்திகவாதிகள் இருக்கும் நிலையில் வெறும் 5% நாத்திகவாதிகளுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதால் தான் அக்கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி, 'கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்றும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இந்த பேச்சால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடவுள் மறுப்பு கொள்கையை கைப்பிடிக்கும் திமுக உள்பட அனைத்து கட்சிகளும், இந்து கடவுள்களை மட்டுமே தாக்கி பேசுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. திமுக தனது கடவுள் மறுப்பு கொள்கையை மனதளவில் வைத்து கொண்டு வெளியில் பேசாமல் இருப்பதே அக்கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments