Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

Prasanth Karthick
புதன், 2 ஏப்ரல் 2025 (15:00 IST)

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்ணனே தங்கையை அடித்துக் கொலை செய்த விவகாரம் குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி வித்யா என்பவர் பீரோ விழுந்து பலியானதாக சொல்லி அவரது குடும்பத்தார் அவரை புதைத்துள்ளனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வித்யாவின் காதலர் போலீஸில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வித்யாவின் அண்ணன் சரவணனை போலீஸார் விசாரித்தபோது அவர்தான் வித்யாவை கொன்றார் என தெரிய வந்தது.

 

வித்யா வேறு சமூகத்து இளைஞரை காதலித்ததால் சரவணன், வித்யாவை ஆணவக்கொலை செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பூர் எஸ்.பி கிரிஷ் குமார் யாதவ் அளித்த விளக்கத்தில் இது ஆணவக் கொலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

வித்யா சரியாக படிக்காமல் இருந்ததால் சரவணன் கண்டித்ததால் இருவரிடையே 2 மாதங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், காதலை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு சரவணன் அறிவுறுத்திய நிலையில் வித்யா வாக்குவாதம் செய்ததால் சரவணன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் வித்யாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments