Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது.. ஆதரவாளர்களிடம் புலம்பினாரா ஓபிஎஸ்?

Mahendran
சனி, 23 மார்ச் 2024 (08:05 IST)
அதிமுக ஓபிஎஸ் பிரிவுக்கு நான்கு தொகுதிகள் தருவதாக முதலில் பாஜக வாக்குறுதி கொடுத்திருந்ததாகவும் ஆனால் பாமகவுடன் கூட்டணி முடிந்து விட்டதால் ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் அந்த தொகுதியில் நீங்களே தனி சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று பாஜக அசால்டாக கூடியதாகவும் ஓபிஎஸ் தனது நெருக்கமான வட்டாரங்களில் புலம்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒரு சீட் மட்டுமே தருவேன் என்று சொல்லிவிட்டார்கள், எனவே நாம் கூட்டணிக்கு ஆதரவு என்று மட்டும் சொல்லிவிட்டு தேர்தலில் இருந்து விலகி விடலாமா என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்

ஆனால் தேர்தலில் போட்டியிட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியும் என்றும் ஒரு சீட்டாக இருந்தாலும் நாம் களம்பிறங்கியாக வேண்டும் என்றும் நீங்களே போட்டியிடுங்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை கூறியதை அடுத்து ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது

 இதனை அடுத்து தான் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments