Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் விற்ற பெண் கைது...105 மதுபாட்டில்கள் பறிமுதல்

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (20:49 IST)
சென்னையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுவிற்பனை கஞ்சா விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனைஅ ஆகியவை அதிகரித்து வருவதாக போலீஸாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து காவல் ஆணையர் சட்டவிரோதமாக மதுபாட்டில், போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை பல்லவன் சாலையில் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் தலைமையில்  போலீஸார் பணியில் இருந்தபோது , மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த பெண்ணை( 58 ) கைது செய்தனர்.  அவரிடம் இருந்த 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments