Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேசியபடி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (14:46 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே  ரயில் பாதையை கடக்க முயன்ற போது,  அவ்வழியே வந்த ரயில் மோதி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
விழுப்புரம் மாவட்டம் நெற்குணம் பகுதியில் வசித்து வந்தவர் ஜான்சிராணி. இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 
 
இப்படியிருக்க, இன்று காலை வழக்கம் போல வேலைக்குச் செல்ல வீட்டிலிருந்து சென்றார் ஜான்சிராணி. கம்பெனிக்கு போகும் வழியில் உள்ள சென்னை - திருச்சி ரயில் பாதையில் அவர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றதாகத் தெரிகிறது. அந்த நேரம் அவ்வழியே வந்த திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதித்தள்ளியது. இந்த கோர சம்பவத்தில் ஜான்சிராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருமணமாக இருந்த பெண், ரயிலில் பலியான சம்பவம், அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதுகுறித்து செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments