Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலில் மயக்க மருந்து – கணவனைக் கொல்ல காதலுடன் சேர்ந்து போட்ட பிளான் !

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (11:18 IST)
நாமக்கல் அருகே தனது கணவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற பெண்ணைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள போதமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா. தம்பதிகள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியாவுக்கு மல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் முருகேசனுக்குத் தெரிந்ததும் இது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்துள்ளது. இதனால் காதலனோடு சேர்ந்து கணவனக்  கொலை செய்ய திட்டம் தீட்டினார் பிரியா. முருகேசனுக்குத் தூக்கமாத்திரை கலந்த பாலை குடிக்க கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரியா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கியுள்ளார்.

ஆனால் மாத்திரை சரியாக வேலை செய்யாத்தால் முருகேசன் மயக்கம் தெளிந்த நிலையில் அங்கிருந்து தப்பித்து போலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பிரியா மற்றும் கௌதம்ராஜை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments