Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிக்கும்போது வீடியோ எடுத்ததால் தீக்குளிக்க முயன்ற தாய்

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (11:28 IST)
பெரம்பலூரில் அனிதா என்ற பெண்ணை ஸ்டூடியோ நடத்தி வரும் நபர் குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டியதால் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார்.


 

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி அனிதா(30) நேற்று பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து காப்பாற்றினர்.
 
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனிதாவிடம் தீக்குளிக்க முயற்சித்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அனிதா வசிக்கும் பகுதியில் வீடியோ ஸ்டூடியோ நடத்தி வரும் வெற்றிவேல் என்பவர் அனிதா வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வீடியோ எடுத்துள்ளார்.
 
அதனை வைத்து சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதுவரை இப்படி அனிதாவை மிரட்டி 16 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் பறித்துள்ளார் வெற்றிவேல். இதை சமாளிக்க முடியாமல் தீக்குளிக்க முயன்றேன் என அனிதா கூறியுள்ளார்.
 
இதையடுத்து காவல்துறையினர் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments