Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலையும் இல்ல.. வாழ்வாதரமும் போச்சு! ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு கிராம மக்கள் மனு

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:42 IST)
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட கலெக்டரிடம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.


 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆடசியர் சந்தீப்நந்தூரி  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
 
அவர்கள் கொடுத்துள்ள மனுவில், ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும்  பாதிக்கப்பட்டு உள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை நம்பி தூத்துக்குடியில் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது ஆலை மூடப்பட்டதால் போதிய மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடி கிடக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராட்டகாரர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் அன்னிய சக்திகளின் கைகூலியாக செயல்படுகிறார்கள். ஆலையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே  ஸ்டெர்லைட் தொழிற்சாலை நீதிமன்ற உத்தரவு படி உடனடியாக திறக்கப்பட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments