Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிப்பு: மாமல்லபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (14:16 IST)
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
நடிகை யாஷிகா நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கார் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்தில் காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சீட்பெல்ட் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
யாஷிகாவிற்கும் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்த நிலையில் தற்போது அதிரடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் எந்த வாகனத்தையும் இனி ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments