Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் வாங்க போன வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்…

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (10:09 IST)
தஞ்சாவூரில் மீன் வாங்க போன நபர் லாரி மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் நேற்று காலை மீன் வாங்குவதற்காக குருவி கரம்பை பகுதிக்கு அருகே உள்ள மீன் மார்க்கெட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயத்தில் மீன் மார்க்கெட் அருகே, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக நீலகண்டன் மீது மோதியது. இந்த விபத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே நீலகண்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீன் வாங்க சென்றவர் பரிதாபமாக லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments