Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (14:44 IST)
திருவாரூரில்  நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்ட செல்வ முருகன் என்ற  நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதது.

திருவாரூர் அருகே திருவாசல் மெயின் ரோடு என்ற பகுதியில் வசிப்பவர் செல்லத்துரை. இவரது மகன் விக்னேஷ். இவரது மனைவி மாரியம்மாள்(26). இவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்ததால், அவருக்கு 5 ஆம் மாதம் மருத்து கொடுக்கும் நிகழ்வு வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது.

அப்போது,  நடந்த விருந்தில் 5 வகையான சாதங்கள் விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது. இந்த விருந்து சாப்பிட்டவர்களுக்கு கொஞ்ச நேரத்திலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அவர்களை  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில்,15 பேர் உடல் நலம் குணமடைந்து வீட்டிற்குச் சென்றனர்.மீதம், கர்ப்பிணிப் பெண் மாரியம்மாள், உள்ளிட்ட 7 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன்(24) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments