Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை; பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (14:48 IST)
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் காலை ஒரு நபர் நின்றுள்ளார். தீடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். 50 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்தார். இதைக்கண்டு அங்கிருந்து பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
 
இதனால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் அந்த தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விமான நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்கொலை செய்துக்கொண்ட நபர் குறித்த தகவல்களும் எதுவும் வெளியாகவில்லை. மேலும், தற்கொலை செய்துக்கொண்ட நபர் கைப்பை ஒன்று வைத்திருந்ததாகவும், அதில் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்தததாகவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments