Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை: உருக்கமான கடிதம்..!

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (14:22 IST)
நிதி நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் வரை இழந்த இளைஞர் ஒருவர் மன விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் உருக்கமாக எழுதிய கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்த வேலூரை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் வரை டெபாசிட் செய்ததாகவும் ஆனால் பணம் தனக்கு திருப்பி கிடைக்கவில்லை என்றும் என்னுடைய மரணத்திற்கு ஐஎஃப்எஸ்  நிறுவனம் தான் காரணம் என்றும் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். 
 
மேலும் என்னை போல பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை அரசு மீட்டு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேசிடம் பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார் அவரது தற்கொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

நெற்றியில் பொட்டு இல்லை.! விஜய்யின் புகைப்படம் மாற்றம்..! இதுதான் காரணமா.?

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments