Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி காவல்துறையில் அளித்த புகார்!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:50 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி வசந்தி என்பவர் ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் 
 
நடிகை சாந்தினி தனது கணவர் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறியுள்ளதாகவும் தனக்கு இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சாந்தினியின் பொய்யாக புகார் காரணமாக தனக்கும் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே சாந்தினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
வசந்தியின் இந்த மனுவை சென்னை அடையாறு காவல் நிலையத்திற்கு அனுப்ப ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்