Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: பெங்களூரு அணி அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:25 IST)
புரோ கபடி போட்டி மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் பெங்களூரு அணியை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அபாரமாக வெற்றி கொண்டது 
 
நேற்றைய போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய நிலையில் பெங்களூர் அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பெங்களூர் அணி வீரர்கள் மளமளவென புள்ளிகளை குவித்து வந்த நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகள் எடுக்க திணறினார்கள். முதல் பாதியிலேயே பெங்களூரு அணி முன்னணியில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் முடிவில் பெங்களூரு அணி 47 புள்ளிகள் எடுத்து எடுத்தது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்களால் 26 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 21 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டிக்குப் பின்னர் அணிகளின் புள்ளி பட்டியலில் டெல்லி அணி 21 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் அணி மற்றும் பெங்களூர் அணியின் தலா 20 புள்ளிகள் எடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மும்பை அணி 17 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், தமிழ்தலைவாஸ் அணி 15 புள்ளிகளுடன் ஆறாவது இடங்களிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments