Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு வீரர்களை புகழ்ந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிவிட்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:00 IST)
இந்திய அணி சிட்னி டெஸ்ட் போட்டியை சிறப்பாக விளையாடி சமன் செய்த நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் 403 ரன்களை துரத்திய இந்திய அணி 334 ரன்கள் சேர்த்து போட்டியை டிரா செய்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய பேட்ஸ்மேன்களான புஜாரா, பண்ட், விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ட்ரா செய்தது. ரிஷப் பண்ட் மட்டும் அவுட் ஆகவில்லை என்றால் வெற்றி பெற்றிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டி டிரா ஆக சிறப்பாக விளையாடிய புஜாரா, பண்ட், ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோரை பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளர். அதில் ‘இவர்கள் நான்கு பேரும் அணிக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். இந்தியா சிறப்பாக செயல்பட்டது. தொடரை வெல்வதற்கான சிறப்பான நேரம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments