Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சி கோப்பையை வென்றால் மகிழ்ச்சி! – ரொனால்டோ கருத்து!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (11:48 IST)
ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் மெஸ்சி கோப்பையை வென்றால் மகிழ்வேன் என பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.

கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டி தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் பல நாட்டு அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜெர்மனி, ஸ்பெயின், பிரேசில் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் தோல்வியடைந்து வெளியேறின. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கல் அணியும் வெளியேறியது.

இந்நிலையில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் எந்த அணி வெல்லும் என பிரேசில் முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டோ தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அதில் “உலகக்கோப்பை இறுதி போட்டியில் பிரான்ஸ்-பிரேசில் அணிகள் மோதும் என நான் கணித்திருந்தேன். ஆனால் பிரேசில் வெளியேறிவிட்டதால் பிரான்ஸ் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லியோனல் மஸ்சி உலக கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments