Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. ஒருசில மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (11:09 IST)
சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே வரும் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஒரு சில மணி நேரத்தில் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. 
 
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. 
 
இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக 1500, 3000 ரூபாய் ஆகிய குறைந்த விலை டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டதாகவும்  அதனை அடுத்து 5000, 6000, 8000,10,0000 ஆகிய டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாகவும்  கூறப்படுகிறது 
 
இருப்பினும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கவுண்டரில் நேரடி டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரூ.1500 விலைக்கான டிக்கெட் மட்டும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments