Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Commonwealth போட்டியில் அடுத்தடுத்து தங்கம்..! – இந்திய வீரர்கள் சாதனை!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (08:40 IST)
லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் (Commonwealth 2022) போட்டிகளில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர்.

22வது காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்காமில் கடந்த ஜூலை 28ல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 72 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடி வருகின்றனர்.

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியா எந்த பதக்கமும் வெல்லாத நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். மேலும் சங்கேத் மஹாதேவ், பிந்த்யாராணி உள்ளிட்டோர் வெள்ளி பதக்கமும், குருராஜ் பூஜாரி வெண்கல பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர் லால்ரினுகா ஜெரிமி ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ, க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

73 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி மொத்தமாக 131 கிலோ பளுதூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியா காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments