Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பயர்கள் நிம்மதியாக தூங்கலாம்… கோலி குறித்து டிவில்லியர்ஸ்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:39 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் கேப்டன்சியை துறந்துள்ளார்.

இந்த சீசனோடு ஆர்சிபி அணி கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக கோலி அறிவித்திருந்தார். அதனால் இந்த முறை கோப்பையோடு அவரை வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் நேற்று கொல்கத்தா அணியுடனான ப்ளே ஆப் போட்டியில் தோற்று ஆர்சிபி வெளியேறியது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக தனது கடைசி போட்டி விளையாடிய பின்னர் கோலி பேசியபோது ‘ இளம் வீரர்கள் நம்பிக்கையுடனும், தைரியமாகவும் விளையாடும் ஒரு சூழலை நான் உருவாக்கியுள்ளேன். இந்திய அணியிலும் நான் அதை செய்தேன். ஒவ்வொரு வருடமும் ஆர்சிபி அணியை தலைமையேற்று என்னுடைய 120 சத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் அதை ஒரு வீரனாக செய்வேன். வேறு எந்த அணிக்காகவும் விளையாட மாட்டேன். ஐபிஎல்  விளையாடும் வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவேன். ’ எனக் கூறியுள்ளார்.

கோலியின் முடிவு குறித்து பேசியுள்ள சக அணி வீரரும், நெருங்கிய நண்பருமான டிவில்லியர்ஸ் ‘சிறப்பாக ஆர்சிபி அணியை வழிநடத்தியவர் கோலி. சிறந்த வீரராகவும், மனிதனாகவும் உருவெடுக்க கோலி உதவினார். வீரர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்துள்ளார். இது கோப்பையை விடப் பெரியது. சில அம்பயர்கள் நிம்மதியாக தூங்கலாம். இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments