Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (08:37 IST)
இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது.
சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மூன்றாம் நபர்கள் தலையீடு இருப்பதை ஏற்காத சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்ததுடன், அக்டோபரில் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்தையும் நடத்தப்போவதில்லை என தெரிவித்திருந்தது.

இதுகுறித்த விவகாரம் மீண்டும் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் மூன்று பேர் குழுவை கலைத்த உச்சநீதிமன்றம், மீண்டும் அதிகாரத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே ஒப்படைத்தது. இதனால் இந்தியாவிற்கு விதித்த தடையை நீக்கிய ஃபிஃபா முன்னதாக அறிவித்தப்படி இந்தியாவிலேயே பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments