Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தேசத்துக்கு வந்து விட்டேன் – ஹர்பஜன் சிங் உற்சாகம் !

Webdunia
சனி, 16 மார்ச் 2019 (16:13 IST)
ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடுவது குறித்து சென்னை வீரர் ஹர்பஜன் சிங் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பத்து வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் வீளையாடி வந்தார். அதில் சில சீசன்களில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். ஆனால் தற்போது பார்ம் அவுட் காரணமாக அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. அதனால் கடந்த சீசன் முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

சென்னை அணிக்கு வந்தபின் சிறப்பாக பந்து வீசினாரோ இல்லையோ செந்தமிழில் டிவிட் செய்து தமிழக ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்தி வருகிறார். தீபாவாளி, தமிழர் திருநாள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், கஜாபுயல் பாதிப்பு அனைத்தும் ஹர்பஜன் தமிழில் ட்விட் செய்து தனது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் 12 ஆவது சீசன் தொடங்க இன்னும் ஒரு வாரகாலமே உள்ளட் நிலையில் மீண்டும் தமிழில் டிவிட் செய்து சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளுக்காக சென்னை வருவது குறித்து ‘பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ்தேசத்திற்கு வந்துவிட்டேன். ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது #விசில்போடு, #சிஎஸ்கேபேன்அபிஷியல்’ என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். முதல் போட்டி சென்னையில் வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்