Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2019: ஹரியானா, உபி அணிகள் வெற்றி!

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (06:29 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய இரண்டு போட்டிகளில் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் வெற்றிவாகை சூடின.
 
நேற்றைய முதல் போட்டியில் ஹரியானா அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டி ஆரம்பம் முதல் இரு அணிகளுமே விறுவிறுப்பாக வெற்றியை நோக்கி விளையாடிய நிலையில், இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகள் எடுத்து வந்ததால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கடைசிவரை யூகிக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இறுதியில் ஹரியானா அணியில் 36 புள்ளிகளும் பெங்கால் அணி 33 புள்ளிகளும் பெற்றதை அடுத்த மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா வெற்றி பெற்றது 
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரபிரதேச அணியுடன் புனே அணி மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச 35 புள்ளிகளும் புனே அணி 30 புள்ளிகளும் பெற்றதை அடுத்து 5 புள்ளிகள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டிக்குப் பின்னர் டெல்லி, ஜெய்ப்பூர், மற்றும் பெங்கால் ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்திலும், பெங்களூர், ஹரியானா மற்றும் மும்பை ஆகிய அணிகள் அடுத்த மூன்று இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் 9-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ அணியை உருவாக்கியதே கம்பீர்தான்.. சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி!

கேப்டன்சி சர்ச்சையால் ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொள்ளவேயில்லை… பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை… தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன் – பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த நடராஜன்!

ஜெய்ஷாவைப் பாராட்டிய பிரகாஷ் ராஜ்… வஞ்சப் புகழ்ச்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments