Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதிலடி கொடுக்குமா இந்தியா? இரண்டாவது ஒருநாள் இன்று தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:09 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இந்தியா. வான்கடே மைதானம் இந்திய வீரர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் ஆட்டம் நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியின் போது ரிஷப் பண்டுக்கு தலையில் காயம் பட்டதால் இந்த ஆட்டத்தில் அவருக்கு பதிலாக கேதர் ஜாதவ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டம் போல் அல்லாமல் இந்த ஆட்டத்தில் ரோகித் ஷர்மா மற்றும் கோலி தங்களது முழு பலத்தையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த இரண்டு ஆட்டங்களை கைப்பற்றினால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இருப்பதால் ரசிகர்கள் இன்றைய ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments