Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு த்ரில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (07:35 IST)
மீண்டும் ஒரு த்ரில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் திரில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹோப் 115 ரன்கள் அடித்தார் என்பதும் கேப்டன் பூரன் 74 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 312 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் அதிரடியாக விளையாடி 64 ரன்கள் எடுத்ததே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்சர் பட்டேலுக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. 
 
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டில் வெற்றி பெற்றதால் இந்திய அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments