Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் லேசான தூறல்: இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:40 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் லேசான தூறல் விழுந்து கொண்டிருப்பதால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்த நிலையில் திடீரென மைதானத்தில் லேசான சாரல் விழுந்தது
 
இதனை அடுத்து வருவது சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பெரிய அளவில் மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த போட்டியை நடைபெறும் என்றும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments