Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 நாட்கள் தனிமைப்படுத்துதல்… இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்!

Webdunia
திங்கள், 10 மே 2021 (08:17 IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட செல்லும் இந்திய வீரர்கள் 18 நாட்கள் தனிமைப்படுத்த பட உள்ளதாக சொல்லபப்டுகிறது.

இந்திய அணி இங்கிலாந்தில் இரு நாட்டு தொடரும் ஜுன் மாதம் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்களின் தேர்வு இன்று நடக்க உள்ளது. வழக்கமாக 15 வீரர்கள் அனுப்பப்படும் நிலையில் இந்த முறை 20 வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என சொலல்ப்படுகிறது. ஏனென்றால் கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்கள் தேவைப்படும் என்ற முன்னெச்சரிக்கைக் காரணமாகவே என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. ஜூன் 18 ஆம் தேதி நியுசிலாந்து உடனான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில் மே 25 முதல் 8 நாட்களுக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்த பட உள்ளனர். இந்த 8 நாட்களில் அவர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. அதன் பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதல். இந்த 10 நாட்களில் பயிற்சிகள் மேற்கொள்ள அனுமதி உண்டு. மிக நீண்ட தொடர் என்பதால் வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

பல்டி அடித்த தென் ஆப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியம்… ஐபிஎல் தொடருக்குத் திரும்பும் வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments