Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி அசத்தல் பேட்டிங்… வெற்றி இலக்கு 225 ரன்கள்…

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (21:09 IST)
ஐந்தாவது  டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிய நிலையில் இந்திய அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றுபெற்றுள்ளன.

எனவே இன்று குர்ஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் 5 வது மற்றும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று யார் தொடரைக் கைப்பற்றப்போகிறார்கள் என ஆர்வம் எழுந்துள்ளது.
 
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தப் போட்டிகளைக் கண்டுவருகின்றனர். இதில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.. இந்தியா பேட்டிங்கில் பட்டாசு கிளப்பியது. ரோஹித் சர்மா 64 ரன்களும், விராட் கோலி 80 ரன்களும், ஹர்திக் பாண்டியா 39 ரன்களும் அடித்தனர். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் இந்திய அணியில் ஸ்கோர் 20 ஓவர்கள் முடியில்  224 அடித்து, இங்கிலாந்துக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments