Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளைய இந்தியா-இலங்கை போட்டிக்கு பின் வான வேடிக்கை கிடையாது: ஜெய்ஷா அறிவிப்பு..!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (12:57 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா கலந்து கொள்ளும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அட்டகாசமாக வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.   இந்த போட்டி முடிந்த பின்னர் வானவேடிக்கை நடைபெறாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

பிசிசிஐ எப்போதும் சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துகிறது என்றும் நாளைய போட்டிக்கு பின்னர் வானவேடிக்கைகள் கிடையாது என்றும் ரசிகர்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி இடம் தெரிவித்துள்ளதாக ஜெய்ஷா கூறியுள்ளார்.

ஒவ்வொரு போட்டியின் போதும் இந்தியா வெற்றி பெற்றவுடன் வானவேடிக்கை நிகழ்த்தப்படும் நிலையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் வானவேடிக்கை கிடையாது என்ற அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments