Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 4 மாசம் இருக்குல்ல..! ஒலிம்பிக்கிற்கு தயாராகும் ஜப்பான்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (12:53 IST)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் அசாதாரண சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கின்றன. தற்போது கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பல சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 24ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல்களையும் தாண்டி ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கமாக அதன் தாயகமான கிரீஸில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. கிரீஸ் முழுக்க கொண்டு செல்லப்பட்ட இந்த தீபம் டோக்கியோவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

இதை கிரீஸிலிருந்து பெறுவதற்காக ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் ஜப்பான் விமானம் கிரீஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த போட்டிகளை நிறுத்துவதால் ஜப்பானுக்கு ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் மாதம் ஒலிம்பிக் தொடங்குவதற்குள் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் என ஒலிம்பிக் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மேலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதால் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments