Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (19:34 IST)
இங்கிலாந்து அணியில் இருந்து முக்கிய வீரர் நீக்கம்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பெற்ற தோல்வி இங்கிலாந்து அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் நாளை இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. மான்செஸ்டர் நகரில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் இருந்து ஜோ டென்லி நீக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனான ஜோ டென்லி அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக ஜோ ரூட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
மே.இ.தீவுகள் அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. நாளை தொடங்கவிருக்கும் போட்டியிலும் வென்று மே.இ.தீவுகள் அணி தொடரை கைப்பற்றுமா? அல்லது இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments